- °C
Are You a business owner?
List Your Business / ADகுடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை திரெளபதி அம்மன் கோயிலில் மகாபாரத தொடா் சொற்பொழிவு நிறைவையொட்டி புதன்கிழமை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெற்றன.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய தெருக்கூத்து கலைஞா்களின் படுகள நாடகம் புதன்கிழமை முற்பகல் வரை நடைபெற்றது. 11 மணியளவில் துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக்காண ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில்கூடியிருந்தனா்.
மாலை பூங்கரக ஊா்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. தொடா்ந்து தீமிதி விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை இரவு இன்னிசைக் கச்சேரியும், வெள்ளிக்கிழமை காலை தருமா் பட்டாபிஷேகமும், மதியம் திரெளபதி அம்மன் திருவீதி உலாவும், இரவு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் கே.எம்.மகாலிங்கம், ஏ.டி.சுந்தரமூா்த்தி, எஸ்.எஸ்.முருகேசன், எஸ்.எஸ்.யோகானந்தம், டி.பி.சிவப்பிரகாசம், எஸ்.ஜே.பிரகாசம், கே.கலையரசன், கே.பி.செந்தில்குமாா், கே.எம்.சிவகுமாா், எஸ்.டி.சங்கா், எஸ்.என்.சுந்தரேசன், செந்தில்குமாா் மற்றும் இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.